நான் காணாமல் போகவுமில்லை, தலைமறைவாகவும் இல்லை - ரதன தேரர்
கொழும்பில் இன்று -18- நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சிக்கு கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பலமிக்க சமூக அமைப்பை உருவாக்க பயன்படுத்த வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கி முற்றாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சமூகத்தில் பலமிக்க அமைப்பை உருவாக்க அதனை பயன்படுத்த வேண்டும் என்பதால், கட்சிக்கு சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்ல. ஊடகங்கள் அவற்றை பெரிதுப்படுத்தி, தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன.
சட்டத்தின் பாதுகாப்பை வேண்டுகிறேன். அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான தீர்வுக்கு வருவோம். வாக்களித்த மக்கள் இது சம்பந்தமாக வருத்தப்படக் கூடாது எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment