Header Ads



திருகோணமலை பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் - சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றன


- ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்  -

புனித தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளினை இன்று (01) முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஹஜ் பெருநாளினை அமைதியான முறையில் திருகோணமலை மாவட்டத்திலும் கொண்டாடி வருகின்றனர்கள்.

சுகாதார நடை முறைகளை பின்பற்றியும் அமைதியான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் இடம் பெற்று வருகிறது. காலையில் பெருநாள் தொழுகைகளை பள்ளிவாயல்கள்,திடல் தொழுகை என தொழுகை நடாத்தப்பட்டது. இந் நாளில் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாகவும் வாழ இந் நாள் வழி வகுக்கிறது.

கிண்ணியா,மூதூர், முள்ளிப் பொத்தானை,கந்தளாய்,புல்மோட்டை உட்பட பல பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாட்டம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.