Header Ads



7 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை - கலவெலயில் அதிர்ச்சி

கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில்,  7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் நேற்று முன்தினம் காணாமல் பேயிருந்த நிலையில் இன்று -01- அவரின் வீட்டிற்கு அண்மையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உறவினர்களுடன் வசித்து வரும் குறித்த சிறுவன், போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிறுவனின் சடலத்தில், துணியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்த அடையாளங்கள் காணப்படுவதுடன் சம்பவ இடத்தில், ஹெரோயின் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள  நிலையில், மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.