Header Ads



மேலும் புதிதாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளார்களா..?

அமைச்சு பதவிகளை இழந்த 5 முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள இணையத் தளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக சிங்கள இணையத் தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கண்டியில் நேற்று புதன்கிழமை (12.08.2020) பதவி ஏற்ற அமைச்சரவை அதிகாரம் உடைய மற்றும் இராஜாங்க அமைச்சர்களைத் தவிர, மேலும் பல திட்ட அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

இதன்படி, 5 திட்ட அமைச்சர்களை நியமிப்பதற்கான ஆலோசனை நடைபெற்றது.

நியமனங்களுக்கான திகதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், இந்த முறை எந்த அமைச்சர் பதவிகளையும் பெறாத முன்னாள் அமைச்சர்கள் குழுவுக்கு பெயரிடப்பட்ட திட்ட அமைச்சர் பதவிகளை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.