Header Ads



ஹிஸ்புல்லாவோடு இணைந்து 50 பள்ளிவாசல்களை அமைப்பதற்கு காணியும், பணமும் கொடுத்தவர்தான் கருணா

ஹிஸ்புல்லாவோடு இணைந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை அமைப்பதற்கு காணியும் கொடுத்து பணமும் கொடுத்தவர் தான் இந்த கருணா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஐந்தாம் இலக்கத்தில் போட்டியிடும் தவராசா கலையரசனை ஆதரித்து அம்பாறை - நாவிதன்வெளி பகுதியில் இன்று இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன்,அவர் மறைமுகமாக முஸ்லிம்களை பலப்படுத்துவதற்கான பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.

ஹரிஸும் கருணாவும் மிகவும் நெருக்கமாக பேசுகின்றார்கள். இந்த நிலையில் இப்போது இருவரும இணைந்து தான் கல்முனை கல்முனை பிரதேச செயலகத்தை பிரிக்கின்ற விடயத்திலே இந்த தேர்தலை வைத்து கபட நாடகம் ஆடுவதாகவும் கலையரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. இவர் ஒரு அரசியல் வாதியா?

    ReplyDelete

Powered by Blogger.