Header Ads



300 பள்ளிவாசல்களுக்கு கால அவகாசம் - புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை


கொரோனா வைரஸ் கார­ண­மாக  சுமார் 300 பள்­ளி­வா­சல்­களின் பத­விக்­காலம் முற்­றுப்­பெற்றும் புதிய நிர்­வா­கங்கள் தெரிவு செய்­யப்­ப­டா­துள்­ளன. 


தற்­போது கொரோனா வைரஸ் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் உள்­ளதால் அவ்­வா­றான பள்­ளி­வா­சல்கள் ஜமா­அத்­தாரைக் கூட்டி ஜன­நா­யக ரீதியில் புதிய நிர்­வா­கங்­களைத் தெரிவு செய்ய வேண்டும். 


அதற்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்கால எல்லைக்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறும் 300 பள்ளிவாசல்களுக்கெதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன்  தெரி­வித்தார்.


- Vidivelli

No comments

Powered by Blogger.