Header Ads



விஷ போதைப்​பொருள்களை பயன்படுத்தி, பேஸ்புக் விருந்துபசாரத்தில் பங்கேற்ற 28 பேர் கைது


பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்  26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை, அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்​பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.