Header Ads



இஸ்லாமிய பெண்களுக்கு நின்றுபோகும் மாதவிடாய் - சீனாவில் கொடுமை,UN வின் தகவல்


சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த வருகின்றனர்.

உய்குர் பிரிவு இஸ்லாமியர்களான இவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க்ளுக்கு சீன அரசு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அட்ரியன் ஜென்ஸ் என்ற நிபுணர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவின் மோசமான இந்த செயல் குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என்ற சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், இந்த ஆய்வறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று சீனா மறுத்து வருகிறது.

ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாக, ஜின்ஜியாங்கில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் உட்கொண்ட கருத்தடை மருந்துகளால், எதிர்பாராதவிதமாக உதிரப்போக்கு ஏற்பட்டதாக, பெண்கள் கூறுவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த பெரும்பாலான பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும், ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உய்குர் இஸ்லாமியர்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதாக சீனா மீது ஏற்கெனவே கடுமையான குற்றச்சாட்டு உள்ளது.

இந்த முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் 10 லட்சம் பேர் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்துவந்த சீனா, ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக முகாம்கள் அமைக்கப்பட்டதை பின்னர் ஒப்புக்கொண்டது.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற சீனாவின் கொடுஞ்செயல் வெளி உலகிற்கு தெரிய வந்தது.

இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது.

மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்க்க வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ சர்வதேச நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.