Header Ads



கண்டியிலே ஹக்கீமின் வெற்றிக்காக, எமது கட்சி உழைக்கிறது - ரிஷாத் .

 
- ஏ.எல்..றபாய்தீன்பாபு -

எம்மை நோக்கி பல சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .நாம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் நமக்காகப் பேசுகின்ற நல்ல தலைமைகள் பாராளுமன்றம் செல்லவேண்டும். வரப் போகின்ற பாராளுமன்றத் தில்  சிறுபான்மை அரசியல்தலைமைகள் பாதுகாக்ககப் பட வேண்டும் . கண்டியிலே ரவுப் ஹக்கிம் வெல்வதற்காக வேண்டி எமது கட்சியின் ஏழு உறுப்பினர்களும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்  இருபதாயிரம் எமது ஆதரவாளர்களை அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளேன். இவ்வாறு நேற்று  குச்சவெளி அ இ மகா  அமைப்பாளர் ரகுமான் யூசுப் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னம் இல 2ல் போட்டியிடும் அப்துல்லா மஹ்றுப் அவர்களை ஆதரித்து 

நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிம கா தேசியத் தலைவர் அல்ஹாஜ் றிஷாத் பதியுத்தீன் மேலும் தெரிவிக்கையில் இந்த நாட்டிலே சிங்கள தமிழ் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும் நல்லிணக்கத்தை விரும்பாத விமல் வீரவன்ச கம்மன்வில போன்றவர்கள் எமது சமூகத்தை சிறுமைப்படுத்தி எமது மையத்துகளை எரிக்கும் அரசாங்கத்தின்  ஏஜன்டுகளாக செயல்படுகின்றனர் .அவர்களது அரசியல் இருப்புக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் அமைதியாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை வம்புக்கு இலுத்து இந்த மக்களை இந்த நாட்டிலே இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கின்ற சதித் திட்டம் தீட்டிக் ெகாண்டிருக்கிறார்கள்
சமூகத்துக்காக பேசுவது அனியாயத்தை தட்டிக் கேப் பது இது குற்றமா? எனவே துணிச்சல் மிக்க ஆற்றலுள்ள எந்தவொரு எதிர் சக்திகளுக்கும் பயப்படா மல் பேசுகின்ற தலைமைகளைத் தெரிவு செய்யுங்கள் என்றார்.

No comments

Powered by Blogger.