Header Ads



எங்கள் ஆட்சியில் நீர், மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகைகள் வழங்கப்படும் - ரணில்

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் நீர்மற்றும் மின்சார கட்டணங்கள் தொடர்பில் மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

அத்துருகிரியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீர்மின் கட்டணங்களை மக்கள் செலுத்துவதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்துவேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நீர்மின்கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்த அரசாங்கம் தற்போது மூன்றுமாத கட்டணங்களையும் ஒன்றாக செலுத்தவேண்டும் என தெரிவித்து வருகின்றது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் 12 தவணைகளில் கட்டணங்களை செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. dear-people
    please donot cast vote following party

    1.podajana paramuna
    2.unp
    3.slfp
    4.halaurmuya

    ReplyDelete

Powered by Blogger.