Header Ads



நான் அரசியலில், ஈடுபட்டது போதும் - மங்கள

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உறுப்பினர்களுக்கிடையில் , ஒற்றுமையின்மை, உள் கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பாராளுமன்ற அரசியலை விரும்பவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு சிங்கள ஊடகத்துக்கு இந்தாண்டு தேர்தல் களத்தில் இறங்காமல் இருக்கத் தான் தீர்மானம் எடுத்தமை பற்றி விளக்கமளித்துள்ளார்.

அரசியல் கட்சிக்குள்ள இணைந்துவிட்டால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . அத்துடன் அவ்வாறு பேசினால் அரசியல் கட்சிக்குள் பின்விளைவுகளை ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சிலர் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனது கருத்துகள் கட்சியில் உள்ள சிலருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், இப்போது தான் அந்த கட்சியிலிருந்து வெளியேறியுள்ளேன் எதிர்வரும் தேர்தலில் சிறப்பாக வென்று காட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களை ஒப்படைத்த சில நாட்களில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில், தான் அரசியில் ஈட்டுப்பட்டுள்ளமை போதும் என நினைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.