Header Ads



அரசியல்வாதிகளின் வீடுகளுக்குச் சென்ற, இலவச மீன் பொதிச் சேவை


பெரும்பான்மையான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மீன்வளக் கூட்டுத்தாபனத்திலிருந்து இலவசமாக உடன் பிடிக்கப்படும் மீன்கள் பெட்டியில் வைத்து வழங்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமைச்சர்கள் ஒவ்வொருவரின் நிலைக்கும் ஏற்ப 10, 15, 20 கிலோகிராம் மீன்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மீன்வளக் கூட்டுத்தாபனம் மாதத்திற்கு 1000 கிலோவுக்கு மேல் மீன்களை வழங்கியதன் காரணமாக பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலவச மீன் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்ட பின்னர் மீன்வளக் கூட்டுத்தாபனத்திற்கு இலாபம் ஈட்ட முடிந்தது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.