Header Ads



நீர்கொழும்பு - போருதோட்டை அல்-ஜன்னாஹ் நிலையத்திற்கு காசோலை கையளிப்பு

நீர்கொழும்பு, போருதோட்டை அல்-ஜன்னாஹ் நிலையத்தில், அங்கு கற்கின்ற, மற்றும் ஊரில் உள்ள ஏனைய விஷேட தேவையுடையவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி நேற்று -09- வியாழக்கிழமை  இடம்பெற்றது.

 இந் நிலையத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி அடைவுகளை மையப்படுத்தியே குறித்த நிகழ்வு அமைந்திருந்தது. 

நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸா மூலம் ரூபா. 500,000 இதன்போது தமது நிலையத்துக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் அதன் பணிப்பாளர் மௌலவி சப்ரி தஸ்லீம் தெரிவிக்கின்றார்.

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஹாரிஸ் ஹுசைன் முயற்சியில் குறித்த தினத்தில் இந்த காசோலை தமக்கு கிடைத்திருப்பது, இந் நிலையத்தின் பௌதீக, உட்கட்டமைப்பு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும், இதற்கு முன்னர் அவர் இந்த பிள்ளைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய நிகழ்வையும் நன்றியுடன் மீட்டிப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையத்தின் தேவைகளில் கைகோர்க்கும் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதுடன், இனிவரும் காலங்களிலும் இதன் தேவைகளை நிவர்த்திக்க, முடியுமானவர்கள் முன்வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றார். நிகழ்வில் பங்கேற்ற நிலையத்தின் நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் மக்கள் அனைவருக்கும் பணிப்பாளர் நன்றியை தெரிவிக்கின்றார்.

1 comment:

  1. சிறப்பானதொரு சேவை.நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஹாரிஸ் ஹுசைன் அவர்களுக்கும் மேயர் தயான் லான்ஸா அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

    ReplyDelete

Powered by Blogger.