பொலிஸ் நிலையம் மீது நான் கல்வீசினேன்- பொலிஸ் அதிகாரியிடம் துணிச்சலுடன் தெரிவித்த பெண்
நான் அங்குலான பொலிஸ்நிலையத்தின் மீது கல்லெறிந்தேன் என பொலிஸ் அதிகாரியிடம் துணிந்து தெரிவித்த பெண்ணொருவர் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த பத்தாம் திகதி மீனவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பொலிஸ்நிலையம் மீது கற்களை வீசி எறிந்தனர்.
அதன் அந்த பகுதிமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரியொருவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
அதேவேளை பொலிஸ்நிலையத்தின் மீது கல்வீச்சினை மேற்கொண்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் அவர்கள் தப்பமுடியாது என தெரிவித்தார்.
யார் உண்மையை ஓத்துக்கொள்கிறீர்கள் என காவல்துறை அதிகாரி கேள்வி எழுப்பியவேளை பெண்ணொருவர் தான் கல்லெறிந்ததாக தெரிவித்தார்.
பொலிஸ்நிலையத்தின் மீது நான் கல்லெறிந்தேன்,முன்னரும் நான் இதனை தெரிவித்திருக்கின்றேன்,நான் நீதிமன்றத்தில் ஆஜராக தயார் என அந்த பெண்மணி தெரிவித்தார்.
அந்த பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Post a Comment