Header Ads



பெண்கள் வார்டிற்குள் வைத்தியர் போன்று, வேடமிட்டு நுழைந்தவர் பிடிபட்டார்


நிட்டம்புவ - வத்துபிட்டிவல வைத்தியசாலையில் பெண்கள் வார்டிற்கு வைத்தியர் போன்று வேடமிட்டு நுழைந்த ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடம் இருந்து ஸ்டதஸ்கோப், போலி ரப்பல் முத்திரை, சிலின்ஜர், சேலைன் குழாய் ஒன்று, ஈ.சீ.ஜி ரோல் 5, மடிக்கணிணி ஒன்று, தொலைபேசி ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திஹாரி, தர்கா மாவத்தையை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (26) அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.