Header Ads



மூன்றரை வயதுச் சிறுமியை, இழுத்துச்சென்ற முதலை - மீகலேவயில் அதிர்ச்சி



மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய -03 கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கால்வாயில் பெண் ஒருவர் தனது மகளுடன் நீராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது குறித்த சிறுமியை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

பிரதேசவாசிகளும், மீகலேவ வனஜீவராசி அலுவலக அதிகாரிகளும் இணைந்து குறித்த சிறுமியை மீட்டு, தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அச்சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உஸ்கல சியம்பலங்கமுவ, லீகொழ வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மீகலேவ பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.