இலங்கையில் இப்படியும், ஒரு வேட்பாளர்
ஹட்டன் - பொகவந்தலாவ - தெரேசியா தோட்டம், மோரா பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு தேர்தல் பிரசாரத்தின் போது மருந்துகளை விநியோகிக்க முயற்சித்த வேட்பாளர் ஒருவருக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை விடுத்து, அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் இந்த நடவடிக்கையே இவ்வாறு தடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி அவர் நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாக பொகவந்தலாவ பிரதேச பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
தன்னை வைத்தியர் என்று உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் எதுவும் அவர் தன்வசம் வைத்திருக்கவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த வேட்பாளர் தன்வசம் வைத்திருந்த மருந்துகளை தமது பொறுப்பில் எடுத்து, அவருக்கு எச்சரிக்கை விடுத்து, அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகவும் அவர் பல விண்ணப்ப படிவங்களையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment