Header Ads



இலங்கையில் இன்றுமுதல் கடுமையாக அமுலாகும் சட்டம்

நாட்டில் இன்று முதல் -16- சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முன்னர் போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாத நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுளளார்.

அத்துடன் கொரோனா தொற்று தொடர்பில் போலி பிரச்சாரம் செய்பவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு போலி பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.