Header Ads



இலங்கையில் சீனா இலஞ்சம், வழங்குவதாக குற்றச்சாட்டு


இலங்கையில் வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக சீனா இலஞ்சம் வழங்குகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சுஜீவசேனவசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா ஜப்பான் ஜேர்மனி போன்ற நாடுகள் வர்த்தகநடவடிக்கைகளுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் வழங்குவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மாத்திரமே இலஞ்சம் வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கைகளுக்காக சீனா இலஞ்சம் வழங்குவதன் காரணமாகவே ராஜபக்சாக்கள் அடிக்கடி சீனா செல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.