Header Ads



மது வெறியுடன் வாகனம் செலுத்தியவரினால் விபத்து - ஒருவர் வபாத்

- ஏ.எல். றபாய்தீன்பாபு -

திருகோணமலையிலிருந்து நிலாவெளியை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த மீன் லொறியொன்று 7 ஆம் கட்டை பெரியகுளச் சந்தி வலைவில் வைத்து அதன்வேகக் கட்டுப்பாட்டை இளந்ததினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முற்சக்கர வண்டி மற்றும் மோட்டாடார் சைக்கிளையும் முட்டி மோதிக் கொண்டு வீதியால் சென்று கொண்டிருந்த மற்றுமொருவர்  மீது மோதி விபத்துக்குள்ளானது .

இதன் போது  இக்பால் நகரைச் சேர்ந்த  ரவுப் என்றழைக்கப்படும் தெளபீக் வயது 50 நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் படுகாயமடைந்த நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுகையில் வபாத்தாகியுள்ளார். 

இவர் மு.கா. கட்சியின்  இக்பால் நகர் அமைப்பாளரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரும்  சமுக சேவையாளருமாவார்.

 வெளிமாவட்டத்தை சேர்ந்த சாரதி குடிபோதையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர், சந்தேகத்தின் பேரில் சாரதி   நிலாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

இவரது ஜனாஸா நல்லடக்கம் இக்பால் நகர் மையவாடியில் செவ்வாய் கிழமை பெருந்திரளான மக்கள் கலந்து கொள்ள நல்லடக்கம் செய்யப்பட்டது  முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல் உச்சபீட உறுப்பினர்கள் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், 

1 comment:

Powered by Blogger.