Header Ads



சஜித், ரணில், அநுர தரப்புக்கள் பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவது நிச்சயம்! ஆனந்த அளுத்கமகே


ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைவது உறுதியாகிவிட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது தற்போதும் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார் .

கண்டியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை பொதுத்தேர்தலின் பின்னர் கைப்பற்றப் போவதாகவும் பொதுத்தேர்தலின் பின் ஆட்சியமைப்பது தங்களது நோக்கம் கிடையாது எனவும் கூறியிருந்தார்.

உண்மையில் அவரால் இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. நான் கடந்த 4 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்தேன். ஆனால் எமது தொகுதி ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் என்னால் ஒரு இனிப்புக்கூட வழங்கமுடியாமற் போனது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் என்றாலும் மக்களுக்கான சேவையை வழங்க முடியாமல் தள்ளாடினேன். அந்த மன உளைச்சலை அடுத்தே நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்தேன்.

அரசாங்கத்திலிருந்து அனைத்து வரப்பிரசாதங்களையும் விட்டு மஹிந்த அணியில் முதலாவது இணைந்த நபர் நான்தான். எனவே வரலாற்றில் எதிர்கட்சியே இல்லாத பிரதேச சபையாக கங்க இஹல பிரதேச சபை மாறியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி உறுப்பினர்கள் அனைவரும் பொதுஜன முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

அவ்வாறு கலக்கமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியினரும், பொதுஜன முன்னணியுடன் விரைவில் இணைந்து கொள்வார்கள். அதேபோல ஜே.வி.பியினரும் இம்முறை நடைபெறும் பொதுத் தேர்தலில் படுதோல்வியடைவார்கள் என்பது உறுதி என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.