Header Ads



தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவேண்டும் - நாமல்


பொதுத்தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டை இலங்கை தடுக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீட்டை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியே நாமல் ராஜபக்ச இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஜோபிடென் வெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு எதிராக கடுமையாக செயற்படப்போவதாக தெரிவித்துள்ளார் என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேபோன்று இலங்கை போன்ற வெளிநாட்டு அரசாங்கங்கள் அமெரிக்கா தங்கள் தேர்தல்களில் தலையிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. pannda namal , always talking lie ?
    allah want prohibit that getting 2/3 majority, before ending ltte prboblem
    yor father rjapaksa made agreement with usa to be offered trinco habour
    when any goverment come to power ,trinco hrabour should give usa arrmy
    moda shinkala people not understand , rajpaksa thugs lier

    ReplyDelete

Powered by Blogger.