Header Ads



மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதை, சிலர் இல்லாமல் செய்கின்றனர்



பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் சிலரே இல்லாமல் செய்து வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிலர் வெளியிடும் கருத்துக்கள் காரணமாக வாக்காளர்கள் தைரியத்தை இழக்கின்றனர்.

மோதல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ள பின்னணியில், அதனை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருகின்றனர்.

அதேவேளை குருணாகலில் நடந்துள்ள தொல்லியல் முக்கியத்துவமிக்க இடம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.