Header Ads



சேற்றை வாரியிறைக்காதீர்கள் - அமைச்சரவையில் ஜனாதிபதி கவலை

நாட்டின் சில பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் சில உறுப்பினர்கள் பரஸ்பரம் சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கம்பஹா, பொலனறுவை மாத்தறை மாவட்டங்களில் சுதந்திரக்கட்சியினரும் பொதுஜனபெரமுனவினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் முன்வைத்து வருவது குறித்து ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

பரஸ்பரம் சேறுபூசும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்தவகையான அரசியலை முன்னெடுப்பவர்கள் அதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.