Header Ads



நாட்டை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் - பிரதமர்


நாட்டை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பத்தேகமவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் துரிதப்படுத்தவேண்டியுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்;கு அவரது எண்ணங்களை முன்னெடுக்கஉதவக்கூடிய அணியும் தலைமைத்துவமும் தேவைஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கடந்த ஐந்து வருடங்களில் நிகழ்ந்தது மீண்டும் நிகழும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதபதியும் பிரதமரும் வேறுவேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக காணப்பட்டதால் 2015க்கு பின்னர் நாடு முன்னேற்றத்தில் பின்னோக்கி செல்லதொடங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அதாவது நாட்டைச் சரியான பாதையில் இருந்து மதமுலான நோக்கிச் சரியாக நகர்த்துவதற்கு மக்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டை வழங்கியாக வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.