Header Ads



அதிகளவு முஸ்லிம்கள் இம்முறை, பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பார்கள் - தனசிறி அமரதுங்க

(அஸ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்கள்  நாட்டினை பாரமெடுக்கும்போது  கோரோனா பயங்கர நோய் பரவும் காலகட்டமும் ,திரைசேரியில் ஒரு சதமேனும் இல்லாதொரு வங்குரோத்து கொண்ட ஒரு  நாட்டையே ஜனாதிபதி  பாரமெடுத்தாா்கள். தற்பொழுது அவா் தலைமையில் கோரோனாவில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளாா்.   

பொருளாதாரத்தில் இந்த  நாட்டைக் கட்டியெழுப்ப நல்லதொரு பாராளுமன்ற உறுப்பிணா்கள் கொண்டதொரு சக்தி அவருக்குத் தேவைப்படுகின்றது. இந்த நாட்டின் ஜனாதிபதி  ஒரு முன்மாதிரியான தலைவா். அவா்  வாழ்க்கையிலேயே ஜனாதிபதியாக வருவதற்கு முன்பு  தோ்தல் காலங்களில் , கட்சிகளில் பேசாதாவா்,  அரசியல்  கட்சிக்காக கொடி கம்பம் நாட்டாதவா் , அல்லது சுவா்களில் பசைபூசி போஸ்டர் ஒட்டாதவா். அப்படியானதொரு நல்லொலுக்கம் கொண்டவா்   இந்த நாட்டின்  வரலாற்றில் முதன் முறையாக புதிய  ஜனாதிபதியாக வந்துள்ளாா். இது நமக்கு ஒரு முன்மாதிரியாகும். அவா்  ஒர் அதிர்ஸ்டசாலியானவா். ஆகவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை  இம்முறை 65 வீதமானவா்களை பாராளுமன்ற  தோ்தலில் புதிய முகங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளாா்கள். அவா்களை நாம் பாராளுமன்றத்திற்கு  அனுப்புதல்  வேண்டும். என தெகிவளை கல்கிசை முன்னாள் மேயரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான தனசிறி அமரதுங்க உரையாற்றினாா்

மாளிகாவத்தை துவான் நௌசாத் தலைமையில் ஜக்கிய நண்பா்கள் அமைப்பு கொழும்பு 2 சீநோனோ்  உணவுச் சாலையில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே தனசிரி அமரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

கொழும்பு மாவட்ட வேட்பளா்களான முன்னாள் அமைச்சா் காமினிலேக்குகே, ரியா் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோறும் இங்கு  உரையாற்றினாா்கள்.
இந் நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பிணா்களான சாமிலா, தெகிவளை மாநகர சபை உறுப்பிணா் சரினா, மகிந்தபாலா, சுயாதீன தொலைக்காட்சி முன்னாள் பணிப்பாளா் சபை உறுப்பிணா் புரவலா்  காசீம் உமா், சப்றாஸ் போன்ற உறுப்பிணா்கள் கலந்துகொண்டனா்

தொடா்ந்து உரையாற்றிய தனசிரி அமரதுங்க -

கடந்த முறை கொழும்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில்  நான்  8வது நிலைக்கு வந்தேன். அதில் 7 பேர் தெரிவு செய்யப்பட்டனா் எனக்கு 1300 வாக்குகள் குறைந்தமையால்   நான் பாராளுமன்றம் செல்லமுடியவில்லை., இம்முறை 7வது நிலைக்கு வந்த மோகான் லால் கேரு தோ்தல்  கேட்கவில்லை ஆகவே இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் சாா்பில்  கொழும்பு மாவட்டத்தில்  12 பேர் கட்டாயம் பாராளுமன்றம் செல்வாா்கள். அதில் நான் உள்ளடக்கப்படுவேன் என எனது நம்பிக்கை- நான் 3 முறை இரண்டு கட்சிகளிலும் தெகிவளை கல்கிசை மேயராக இருந்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ,கோட்டபாய ராஜபக்சவும் எனக்குத்  தந்த ஒத்துழைப்பினால் தெகிவளை-கல்கிசைப்பிரதேசத்தில் யாரும் குறை கூறாத அளவுக்கு தனது சேவையை  செய்துள்ளேன். சமையறையில் இருந்து மலசல கூடம் செல்லும் அளவுக்கு சகல பாதைகளும் காபட் இடப்பட்டுள்ளது.  நான் தோல்வியுற்றாலும் கட்சியைவிட ராஜபக்ச குடும்பங்களுடனேயே இருப்பேன். கடந்த காலத்திலும் அவ்வாறு தான் அவா்கள் காலடியில் தான் இருந்து வந்துள்ளேன். மற்றவா்கள் போன்று பணத்திற்கும் பதவிக்கும் அங்கும் இங்கும் நான் கட்சி மாறவில்லை.  இம்முறை கொழும்பு மாவட்டத்தில் பழைய பாராளுமன்ற உறுப்பிணர்கள் 6 பேரும், புதியவா்கள் 16பேரும் எமது கட்சியில் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளாா்கள். . நீங்கள் பழையவா் ஒருவருக்கு ஒரு விருப்பு வாக்கும் புதியவா் இருவருக்கும் விருப்பு வாக்குகளை அளித்து பாரளுமன்ற செல்ல வாய்ப்புத் தாருங்கள். 

இந்த நாட்டில் இன,மத பேதமின்றி சகலரும்  சமதானமாக வாழ்வதற்கு நாம் நல்லதொரு சுழ்நிலையை ஏற்படுத்தல் வேண்டும். கடந்த காலங்களில் அங்கும் இங்கும் பாய்ந்தவா்களுக்கு வாக்குஅளிப்பதில் மறுபரிசீலனை செய்துங்கள்.   இந்த நாட்டின் அரசியல் மிகவும் பாழடைந்த நிலைக்கு கொண்டு சென்றவா்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவா்கள்.  இருந்தும் இம்முறை எமது கட்சியில்  அவருக்கு வாக்கு கேட்பதற்கு  சா்ந்தா்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.  ஆகவே இம்முறை கனிசமான முஸ்லிம்கள் இன வேறுபாடின்றி எமது கட்சிக்கு கணிசமாக வாக்களிப்பாா்கள் என நம்புகின்றேன்.  நாம் தமிழா்களை சீண்டி இந்தியாவை பகைத்துக் கொண்டு  யுத்தம் செய்தோம். அதில் இருந்து மீள 30 வருடங்கள் கடந்தன. அதில் சகலரும் துண்பப்பட்டோம். . ஆனால் முஸ்லிம்களை சீண்டி நாம்  யுத்தம் செய்தால் இந்த உலகில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுடன் ராஜதந்திரத்தினை முறித்துக் கொள்ள வேண்டி ஏற்படும். ஆகவே முஸ்லிம்களை கடந்த காலங்களில் சில முஸ்லிம்களை  சீண்டினாா்கள். அவைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.  நாம் ஜக்கியமாகவே வாழ்வோம். இங்கு 200க்கும் மேற்பட்ட கொழும்பு மத்தி வாழ் மக்கள்  கூடியிருக்கின்றிர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் 50  போ்களை திரட்டி வாக்கு அளிப்பதற்கு உதவிபுரியுங்கள்.    எமது கட்சிக்கும் கொழும்பு மாவட்டத்தில் 12 பேருக்கும் அதிகபடியான பாராளுமன்ற உறுப்பிணா்களை அனுப்புவீா்களென எதிா்பக்கின்றேன் என தனசிறி அமரதுங்க அங்கு உரையாற்றினாா் 

2 comments:

  1. முஸ்லிம்களின் ஜனாஸாக்களை  எரித்ததனூடாக அவர்களைச் சீண்டி 180 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளோடும் ஓர் மெளன யுத்தம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

    உங்கள் ஜனாதிபதி இறுதி யுத்தத்தை இடையில் விடாது பிடிவாதமாக எடுத்துச் சென்று முடித்த பாங்கு பாராட்டுக்குரியது.

    ஆனால், எவருக்கும் எவ்விதப் பலனுமற்ற ஜனாஸா எரிப்புச் சட்டத்தை ரத்துச் செய்யாமல் அவர் இன்னும் பிடிவாதமாக இருப்பது, இன்னோர் மறை சக்தியால் அது சாத்தியமாக்கப்பட அவர் வழி விடுகிறார்  என்பதுதான் பொருள்.

    ReplyDelete
  2. dear-people
    do not vote following party
    unp
    podjana parmuna
    slfp
    jathkal kalurumiya

    ReplyDelete

Powered by Blogger.