Header Ads



வெலிக்கடை சிறைச்சாலைக்கு வரவேண்டாம் - திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!

மறு அறிவித்தல் வரும்வரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியாட்கள் உட்செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று -07- சிறைக்கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதி உள்ளிட்ட 174 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்  ஜாசிங்க தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்  ஜாசிங்க தெரிவிக்கையில், குறித்த சிறைக்கைதி கந்தக்காட்டிலுள்ள போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நிலையத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

No comments

Powered by Blogger.