காரைதீவு பிரதேசசபை தோடம்பழ உறுப்பினர் பஸ்மீர், ஹரீஸின் வெற்றிக்காக உழைப்பதாக உறுதியளிப்பு
(சர்ஜுன் லாபீர்)
காரைதீவு பிரதேச சபை தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர் இன்று(16) உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்.இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரருமான எச்.எம்.எம் ஹரீஸின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதுடன் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து தேர்தல் கேட்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காகவும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் வெற்றிக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்பஸ்மீர் குறிப்பிட்டு இருந்தார்.
மாளிக்கைக்காடு மேற்கு வட்டாரத்தில் தோடம்பழ சுயேச்சை குழு சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் தோடம்பழ சுயேச்சை குழு நிர்வாக உறுப்பினர்கள் தொடர்ச்சியான புறக்கணிப்பு மற்றும் தோடம்பழ சுயேச்சை குழு உறுப்பினர்கள் அண்மையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையும் போது கூட தன்னை அழைக்கவில்லை என்பதோடு இன்னும் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தாக குறிப்பிட்டு இருந்தார்.
நல்லம்
ReplyDeleteBig politician jointed with aria.
ReplyDeleteAris's victory is confirmed.
அவர் பெற்ற வாக்கு 425 ( 38.53%) votes out of 1103.
ReplyDeleteஇவர் தோடம்பழத்தில் இருந்து கட்சி மாற வில்லை.
உப தவிசாளர் பதவிக்கு ஆசைப்பட்டு 2018 இலேயே தோடம்பழத்தை விட்டு பாய்ந்து விட்டார்
ஏற்கனவே jameel உடன் ACMC போய் விட்டார்.
இப்போது மீண்டும் jameel உடன் SLMC க்கு போய் இருக்கிறார்.
மீண்டும் jameel உடன் NC க்கு போவதாக தகவல் (மாகானசபை தேர்தலுக்கு)