Header Ads



கொரோனா பற்றிய எந்த தகவலும் மறைக்கப்படவில்லை – சவேந்திர சில்வா


கொவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை மறைக்கவேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர் குறித்த எந்த விபரத்தையும் மறைத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானதும் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் அரசாங்க தகவல் திணைக்களம் அனைத்து தகவல்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.