Header Ads



தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது - நாமல்

கொரோனா அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் பொதுத்தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, அரசியல்வாதிகளையும், மக்களையும் பாதுகாத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

No comments

Powered by Blogger.