Header Ads



பொலிஸ் அதிகாரியை இழுத்துச்சென்ற முதலை - தேடும் பணியில் கடற்படையினர்


நில்வலா கங்கையில் தவறி விழுந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முதலையொன்று இழுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நாதுகல பகுதியில் நேற்று -01- இடம்பெற்றுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசி கங்கையில் விழுந்ததை தொடர்ந்து அதை அவர் எடுப்பதற்காக முயற்சித்துள்ளார்.

இதன்போது திடீரென தவறி கங்கைக்குள் விழுந்த நிலையில் பொலிஸ் அதிகாரியை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த அதிகாரியின் சடலத்தை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. IVAR PAAVAM. TRAFFIC POLICE.
    EPPADIPATTAVARKAL,
    EPPADI MANITHAAPIMAANA MURAYIL, NADANDUKOLKIRAARKAL,
    ENRU NAAN SHOLLI, YAARUM
    VILANGAVENDIATHILLAI.

    ReplyDelete

Powered by Blogger.