Header Ads



கல்வியமைச்சு வெளியியிட்டுள்ள, விசேட அறிக்கை

நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பினர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விசேட திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித் துள்ளது.

இதற்கமைய தமது பாடசாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா தொற்று காணப்படுவதற்கான அறிகுறிகள் காணப்படு மாயின் அது தொடர்பில் அறிவிக்க விசேட தொலைத் தொடர்பு முறைமைகளையும் அந்த அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

கல்வி அமைச்சர் டலஸ் அழகபெருமவின் ஆலோசனையின் படி சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் மாகாண மட்ட கல்வி வலய அதிகாரி களையும் ஒன்றிணைத்து விசேட தகவல் நிலையம் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிலையத்திற்குத் தகவல் வழங்குவதற்கான புதிய தொலைப்பேசி இலக்கம் மற்றும் தொலை நகல் இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொபேசி இலக்கம்-0112785818, மின்னஞ்சல்-info@moe.gov.lk, துரிததொலைபேசி இலக்கம்-1988 ஆகிய எண்களுடன்  தொடர்பு கொண்டு  அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக்குழு உறுப்பினர்கள் தமது பிரதேசத்தில் காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.