அமிதாப்பச்சன் குணமடைய, பிரார்த்திக்கும் பிரதமர் மகிந்த
பிரபல இந்திய திரைப்பட நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வரும் நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகியோர் சிறந்த உடல் நலத்துடன் விரைவாக குணமடைய, அவர்களுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நடிகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்கள் இந்தியாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
77 வயதான நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் மும்பாயில் உள்ள நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அமிதாப்பச்சன் மற்றும் அவரது புதல்வருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியானது. எனினும் ஜஸ்வர்யாராய்க்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை எனவும் பரிசோதனைகளில் உறுதியானது.
கடந்த 10 நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனது குடும்பத்தினருடன் கொரோனா பரிசோதனைகளை செய்துக்கொள்ளுமாறு அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment