Header Ads



தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

  பாறுக் ஷிஹான்  

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று -09- நடைபெற்றது.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.பி.இந்திக்க உதயங்கர கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.எச். றிஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கொவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி 

தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே சமூக இடைவெளி பேணல் தேர்தல் கூட்டங்களை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதலின் அவசியம் குறித்தும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வேட்பாளர்களை அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி 

எதிர்வரும் தேர்தல் காலங்களில் வேட்பாளர்களாகிய நீங்கள் சுகாதார பிரிவு பொலிஸ் தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை தர முன்வர வேண்டும்.கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து எமது நாட்டில் காணப்படுவதனால் சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு வேட்பாளரும் பின்பற்றுவது அவசியமாகும்.எனவே இவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது கட்சி கூட்டங்களை நடாத்துபவர்கள் கட்சி வேறுபாட்டிற்கு அப்பால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இக்கூட்டத்தில் கல்முனை தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட்டதக்கது.

No comments

Powered by Blogger.