Header Ads



தப்பிச்சென்ற கொரோனா நோயாளி - தேடும் முயற்சி தீவிரம்


முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபரை தேடி கண்டுபிடிக்கும் நோக்கில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று (24) அதிகாலை தப்பியோட்டியுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

பொதுமக்கள் குறித்த நபர் தொடர்பான தகவல்களை 0718591017, 0718592290, 0718591864 மற்றும் 119 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர், இடது கால் உபாதைக்கு உள்ளான ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் திருகோணமலை, மார்பிள் பீச் ரோட், சீனக்குடா பகுதியை சேர்ந்த 41 வயதானமொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. எரியாமல் அடக்கப்பட
    உயிருடனே ஒரே ஓட்டம்!
    உயிரியல் ஆயுதமல்ல நாம்
    உலக வாழ்வுக்கும் பொறுப்புக் கூறி
    உயிரின் பின் சுவனத்தை ஆசிப்போர்!

    ReplyDelete

Powered by Blogger.