Header Ads



இனவாதத்தையும், போலி தேசப்பற்றையும் மக்கள் நிராகரிப்பார்கள் - சுஜீவ

ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவசேனசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வென்ற பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் எனவும் அவா தெரிவித்துள்ளார்.

சில ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் பயணத்திற்காக மக்களில் சிலர் அடிமைகள் போல செயற்பட்டு இனவாதத்தை தூண்டுகின்றனர் என சுஜீவசேனசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் இனவாதத்தையும் போலி தேசப்பற்றையும் நிராகரிப்பார்கள் ஒரு தேசமாக செயற்படுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காடையர்கள் கப்பம் பெறுபவர்கள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை நிராகரிக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல்வாதிகளின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.