Header Ads



வடபகுதி கடலில் கொரோனா அறிகுறிகளுடன், முன்னாள புலி உறுப்பினர் கைது - கடற்படை பேச்சாளர்

வடபகுதி கடலில் கொரோனா வைரசிற்கான அறிகுறிகளுடன் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொண்டமானாறு கடற்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படையின் பேச்சாளர் இசுறு சூர்யபண்டார தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பேராளி என்பது தெரியவந்துள்ளது அவருக்கு கொவிட் 19க்கான அறிகுறிகள் காணப்படுகின்றன அவர் யாழ்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய மூவரையும் தனிமைப்படுத்தியுள்ளோம் அவர்களை பிசிஆர் சோதனைக்குட்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 கடற்படையினரையும் தனிமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.