Header Ads



அரசாங்கம் மீது வைத்திருந்த, நம்பிக்கை சீர்குலைந்துள்ளது - ஞானசாரர்


தற்போதைய அரசாங்கம் மீது வைத்திருந்த நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

கோட்டாபய ராஜபக்ச போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நாம் நினைத்தோம்.

விகாரைகளிலும் சில புரிதல் இல்லாத நபர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இந்த மரபுகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை. அவர்களுக்கு தேரர்கள் யாரென்றும் தெரியாது.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதாக கேள்விப்பட்டேன்.

இதனை நியாயப்படுத்துமாறு தேரரர்களிடம் கூறுமாறு அவர்கள் பிரதமரிடம் தொிவிப்பதாக கேள்விப்பட்டேன். இந்தக் குற்றத்தை நியாயப்படுத்த முடியுமா?.

சிலர் இது குறித்து எங்களுக்கு கூறினார்கள். இது தொல்பொருளுக்கு சொந்தமானது கிடையாது என கூறுகின்ற நபர்களும் இருக்கின்றார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.