Header Ads



வாக்குச்சீட்டை பெற்றுக் கொண்டீர்களா...?


பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று -11- முதல் ஆரம்பமாகவுள்ளன.

இந்த நடவடிக்கை இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளளன.

உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இந்த மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

குறித்த நாளுக்கு முன்னர் உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட தபால் நிலையங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்குச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.