Header Ads



அமீர் அலியுடன் இணைவதாக, வண்ணத்துப்பூச்சி வேட்பாளர் அறிவிப்பு


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு  சார்பாக இலக்கம் 2ல் போட்டியிடும் வேட்பாளர் கணேசன் சுரேஷ்    இன்று (திங்கள் கிழமை) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன் இணைந்து அவரது வெற்றிக்காக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர்   எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் ஓட்டமாவடி இல்லத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை பிரதி தவிசாளர் எஸ்.சந்திரபாலன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.தையூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.