Header Ads



இந்த அரசாங்கமும் முன்னைய, அரசாங்கம் போலவே செயற்படுகின்றது - ஞானசாரர்


முன்னைய ஆட்சியாளர்களை போன்று இந்த அரசாங்கமும் குறுகியநோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றது என பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஞானசார தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான திட்டம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முன்வைத்துள்ளார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தொழில்சங்கத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தின் 51 வீதத்தினை இலங்கையிடமும் 49 வீதத்தினை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.

பெயர் தெரியாத இரு நிறுவனங்களுக்கு 51 வீதத்தினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் நிறுவனங்களின் பெயர்கள் தெரியாமல் எப்படி அமைச்சரவை பத்திரத்தினை தயாரிக்கலாம் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழைய வழிமுறைகளை பின்பற்றக்கூடாது என்பதற்காகவே இந்த அரசாங்கத்துக்கு மக்கள் அதிகாரத்தினை வழங்கினார்கள் என தெரிவித்துள்ள ஞானசார தேரர் எனினும் இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கம் போலவே செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.