Header Ads



தேர்தலுக்கு பின் ஹக்கீமையும், றிசாத்தையும் பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக்கொள்ள இடமளிக்கமாட்டேன்


பொதுத் தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் ஏனைய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் என்பதை அமைச்சர் விமல் வீரவங்ச சூசகமாக தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

யாரை அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டாலும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதியூதீன் தரப்பினரை பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தான் இடமளிக்க போவதில்லை எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளும் இந்த வேலைத்திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பவில்லை எனவும் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.