Header Ads



கருணாவின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ், வெற்றி பெற சந்தர்ப்பம் உள்ளது


- பாறுக் ஷிஹான் -

தமிழ் மக்களை ஏமாற்றி கருணா அம்மான் வாக்குகளை அபகரிக்க வந்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக  ஜனநாயக போராளிகள் கட்சியுடளன் இணைந்து   விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று -28- மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்  தமிழ் மக்களிற்கு முக்கியமானது.தற்போது அத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள கருணா அம்மான் தினமும் பொய்களை கூறி வருகின்றார்.மக்களின் வாக்குகளை சூறையாடி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதைக்கின்றார்.இவரின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் என்பவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.எனவே இவ்வாறான இனவாதம் பேசுபவர்கள் எமது தமிழ் பேசும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

1 comment:

  1. உணமையில் கருணா மாத்தையா அம்பாரை மாவட்டத்தில் தேர்தலில் குதித்திருப்பது தமிழர் வாக்குகளை சூறையாடவே என்பது 3-வயதுக்குழந்தைக்கும் நன்கு தெரியும். அந்தாள் மக்களிடம் இருந்து சூறையாடிய பணத்தை மக்களிடமே கொடுக்க வந்திருப்பது மிக முக்கியம் வாய்ந்த பாராட்டுக்குரிய விடயமாகும். தவிர ஜெயசிரில் குறிப்பிடுவதுபோல் அதாவுல்லா ஒன்றும் மக்களின் ஆதரவற்றவர் அல்லர். 17 வருட காலம் பாராளுமன்ற உறுப்பினராகவும் அதே கால அளவு அமைச்சர் பதவியிலும் இருந்தவர. இன்று திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் அதாவுல்லாவும் ததேகூட்டமைப்பு வேட்பாளரும்தான். இம்முறை தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள். எமது மாவட்டத்தில் ததேகூட்டமைப்பு ஒரு ஆசனத்தைப் நிச்சயமாகப் பெறும். அங்கு வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் தாம் ஏமாந்த சோனகிரிகள் அல்லர் என்பதனை கருணாவைத் தோற்கடிப்பதன்மூலம் முழு உலகிற்கும் வெளிப்படுத்துவர். (ஜெயசிரில் சந்தோஷம்தானே. நடக்கப்போகும் உண்மையை சொல்லி இருக்கேன்பா)

    ReplyDelete

Powered by Blogger.