Header Ads



முஹம்மது நசீரின் வாகனத்தின் மீது குருநாகலில் தாக்குதல்

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான முஹம்மது நசீரின் வாகனத்தின் மீது குருநாகலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குருநாகல் – மல்லவபிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 9.30 அளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் வேட்பாளரின் வாகனம் சேதமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக வேட்பாளரான முஹம்மது நசீர் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.