Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு நாள் கூட்டுசேரும் - ரஞ்சன்


கட்சியின் குருநாகல் வேட்பாளர் ஜே.வி.அலவத்துவல இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பிரிந்து வந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும்போது ஐக்கிய தேசியக்கட்சி தம்மை உறுப்புரிமையில் இருந்து விலக்குகிறது என்ற பிரச்சாரத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை வெளியேற்றல் என்பது தம்மை பொறுத்தவரை புதிய ஒன்றல்ல என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் திவுலப்பிட்டிய அமைப்பாளர் மற்றும் கம்பஹா அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமையால் தற்போதைய நீக்கல் தமக்கு புதிதல்ல என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.

அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை. எனவே ஐக்கிய தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒருநாள் இணையும் என்பதில் தமக்கு நம்பிக்கையிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.