Header Ads



ஆபாச வீடியோக்களை அமெரிக்காவிற்கு, விற்ற இலங்கை ஆசிரியர்


54 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டவர் என்பதோடு 2012 ஆம் ஆண்டு முதல் 8 வயது முதல் 15 வயது வரையிலான ஆண் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆசிரியரின் வீட்டிலிருந்து பெருந்தொகையான உள்ளாடைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு சிறுவர்களின் ஆபாச காணொளிகள் அடங்கிய 130 காணொளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் க.பொ.த சாதாரண தரம் வரையிலேயே கல்வி பயின்றுள்ளார் என்பதோடு அவருக்கு ஆங்கிலம் கற்பிக்க போதியளவு தகுதியில்லை எனவும் விசாரணைகளில் அறியகிடைத்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு இலக்கான 3 சிறுவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு சந்தேக நபரால் சிறுவர்களுக்கு ட்ரோன் கெமரா பரிசளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.