கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதா, இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே இருக்கும்
கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆபத்து இன்னமும் குறைவடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் வெளிப்படுத்திய அக்கறை தற்போது குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment