வெளிநாடுகளில் கொரோனாவினால் இலங்கையர்கள் உயிரிழந்தால், உடல்களை அங்கேயே அடக்கம்செய்ய உத்தரவு
வெளிநாடுகளில் கொரோனா தொற்று காரணமாக நாற் பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைய கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 16 நாடுகளில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நாட்டில் நிலவும் தனிமைப்படுத்தப் பட்ட விதிமுறைகளின் படி சடலங்களை இலங்கைக் குக் கொண்டு வர முடியாத நிலை காரணமாக இறுதிச் சட ங்குகளை அந்த அந்த நாடுகளிலே செய்யபடவேண்டும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர் கள் கொரோன தொற்றுக் குள்ளாகி உயிரிழந்தமைக்காக 40 ஆயிரம் ரூபா வழங் கத் தான் யோசனை முன்வைத்ததாக அவர் தெரிவித் தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.
Post a Comment