Header Ads



தேர்தலை உடனடியாக ஒத்திவையுங்கள் - ரணில்


தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து நாடு ஆபத்தான நிலையை எதிர்நோக்கியுள்ளதால் தேர்தலை பிற்போடவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதிநிமிடம் வரை காத்திருக்ககூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிநிமிடம் வரை காத்திருக்காமல் தேர்தலை பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில்விக்கிரமசிங்க அனைத்து வேட்பாளர்களும் ஏற்கனவே பெருமளவு பணத்தை செலவிட்டுள்ளனர் , இறுதி நேரத்தில் தேர்தலை பிற்போட்டால் அவர்கள் செலவிட்ட பணம் வீணாகிவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாவது சுற்று வைரஸ் நிச்சயமாக பொருளாதாரத்தை அழித்துவிடும் என்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.