உங்களுக்கு என் நன்றி - மனைவி, மகள்கள் குறித்து அப்ரிடி வெளியிட்ட நெகிழ்ச்சி
சாகித் அப்ரிடி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொரோனாவிலிருந்து வீடு திரும்பினார்கள் என்று மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 40 வயதான இவர் கொரோனா தோற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் தற்பொழுது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் எனது மனைவியும் இரண்டு மகள்களான ஆசனா மற்றும் அக்ஸாவிற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது .
இந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் கொரோனா வைரஸ்காண சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டாவது சோதனை முடிவில் மனைவி மற்றும் எனது குழந்தைகளுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்து உள்ளது ,
மேலும் தொடர்ச்சியான உங்கள் அதரவுக்கு மிகவும் நன்றி. உங்களை கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் மேலும் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment